உடல் உறுப்புகளிலேயே மிக மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றான சிறுநீரகம், பழுதடையும்போது உடலுக்குத் தீராத தீங்கு ஏற்பட்டு மரணம் கூட விளையலாம். அதன் அமைப்போ மிகவும் சிக்கல் வாய்ந்தது மட்டுமல்லாமல், அதன் செயல்பாடும் மிகவும் ஆழமான சிக்கல்கள் கொண்டது.
அவற்றின் செயல்பாடுகள் மிக முக்கியமான செயல்பாடுகள் ஆகும். விஷத்தன்மை கொண்டதும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியதுமான திரவங்களை அகற்றி நீரின் சமநிலையைப் பாதுகாத்து, தாது உப்புகள் மற்றும் இதர இரசாயனங்களின் அளவை உடலுக்குள் பாதுகாத்து வருகின்றன.
சிறுநீரகங்களின் அமைப்பு:
விஷத்தன்மை கொண்ட கழிவுப் பொருட்களை நீக்கிச் சிறுநீரகங்கள் சிறுநீரை உருவாக்குகின்றன. அப்படி சிறுநீரகத்தில் உருவான சிறுநீரானது யுரேட்டர் (Ureter) எனும் சிறுநீர்க் குழாய் மூலமாக சிறுநீர்ப்பைக்குச் செல்கிறது. இறுதியில் யூரித்ரா எனும் குழாய் வழியாக வெளியேற்றப்படுகிறது.
- மிகப் பெரும்பான்மையோர் (ஆணோ அல்லது பெண்ணோ) இரு சிறுநீரகங்களைப் பெற்றிருக்கிறார்கள்.
- அடிவயிற்றுக்குச் சற்று மேலும் முதுகெலும்பின் இரு பக்கங்களுக்கும் ஒன்றாக இவை இருக்கின்றன (படத்தைப் பார்க்கவும்). அவற்றின் கீழ் இருக்கும் விலா எலும்புகளால் பாதுகாப்புடன் அமைக்கப்பட்டிருக்கின்றன.
- சிறுநீரகங்களே அடிவயிற்றின் ஆழப் பகுதியில் உள்ளே அமைக்கப்பட்டிருப்பதால், சாதாரணமாக அவை இருப்பதை உணர முடியாது.
- சிறுநீரகங்கள் ஒரு ஜோடி அவரை விதை போல இருக்கும். பெரியவர்களுக்கு, ஒரு சிறுநீரகம் சுமார் 10 செ.மீ. நீளம் இருக்கும். 6 செ.மீ. அகலம் இருக்கும் மற்றும் 4 செ.மீ. கனம் இருக்கும். சுமார் 150 முதல் 170 கிராம் எடை கொண்டது.
- சிறுநீரகங்களில் உருவான சிறுநீர், சிறுநீர்ப்பையைச் சிறுநீர்க்குழாய்கள் மூலம் சென்று அடைகிறது. அந்தக் குழாய் சுமார் 25 செ.மீ. நீளமுடையது; அதன் வழியாகவே சிறுநீர் செல்கிறது. தனிச் சிறப்பு வாய்ந்த தசைகளால் அவை உருவானவை.
- சிறுநீர்ப் பையானது ஒரு வெற்றிடமாக இருக்கும் உறுப்பு; அது தசைகளால் ஆனது.
அடி வயிற்றுக்குக் கீழும் பின்புறமும் அமைந்திருக்கின்றன.

- வயதானவர்களுக்கு இந்த சிறுநீர்ப் பையானது சுமார் 400லிருந்து 500 மி.லி. வரை சிறுநீரை சேகரித்து வைக்கும். அந்தப் பை நிரம்பியவுடன், சம்பந்தப்பட்டவருக்குச் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.
- சிறுநீர் யூரித்ரா எனும் குழாய்கள் வழியே வெளிவருகிறது. பெண்களுக்கு இந்த குழாய் சற்று சிறியதாக இருக்கும். ஆண்களுக்கு அதை விட நீளமாக இருக்கும்.
- தொடர்ச்சியாக இடைவிடாது உணவுப் பொருட்கள் சக்தியாக மாற்றும் பணியானது விஷத்தன்மை கொண்ட பொருட்கள் அனைத்தையும் உற்பத்தி செய்தவண்ணம் இருக்கின்றன.
- இந்த செயல்பாடுகள் எல்லாமாகச் சேர்ந்து, உடலில் இருக்கும் திரவத்தின் அளவையும், மின்பகு பொருட்களின் (Electrolytes) அளவையும் அமிலங்களின் அளவையும் மாற்றிக் கொண்டே இருக்கிறது. தேவையற்ற கழிவுப் பொருட்கள் கொண்டுவரும் விஷத்தன்மை சில சமயங்களில் எல்லையற்றுப் போகலாம்.
- சிறுநீரகங்கள் உடலிலிருந்து விஷம் தங்கியுள்ள அமிலங்களையும் தீய திரவங்களையும் அகற்றுகின்றன. அவை செய்யும் மிக மிக முக்கியமான சுத்திகரிப்புத் தொழிலாகும். அதே சமயத்தில் உடலில் இருக்கும் நீரின் அளவை சமநிலைப்படுத்துகிறது. அதே சமயத்தில் மின்சாரம் பாயும் திரவங்களையும், அமிலங்களின் அளவையும் சமநிலைப்படுத்திக் கொண்டே செல்கிறது.
சிறுநீரகங்களின் மிக முக்கியமான செயல்பாடு சிறுநீரை உருவாக்கி இரத்தத்தை சுத்திகரிப்பதாகும்; அதாவது, கழிவுப் பொருட்களை உடலிலிருந்து வெளியேற்றுகின்றன. அதிகப்படியாக உள்ள தேவையற்ற பொருட்களை உடலில் தங்கிவிடும் உப்புகளையும் இதர இரசாயனங்களையும் அளவாக வெளியேற்றி விடுகின்றன. சிறுநீரகங்களின் முக்கியமான வேலைகள் கீழ்க்கண்ட வகையில் சித்தரிக்கப்படுகின்றன.

1. கழிவுப் பொருட்களை அகற்றுதல்
சிறுநீரகங்களின் மிக முக்கியமான வேலையானது உடலுக்குள் சேரும் கழிவுப் பொருட்களை அகற்றி இரத்தத்தை சுத்தப்படுத்துவது ஆகும். நாம் உண்ணும் உணவில் புரதச்சத்து இருக்கிறது. புரதமானது உடல் வளர்ச்சிக்கும் உடலை அவ்வப்போது புதுப்பிக்கவும் தேவைப்படுகிறது. ஆனால் புரதத்தைச்.

உடல் உட்சீரணத்துக்குக் கொண்டுவரப்படுகிறது, கழிவுப் பொருட்களை உருவாக்கி விடுகிறது. இக்கழிவுப் பொருட்கள் உடலில் சேரச் சேர விஷத்தன்மை கூடுகிறது. சிறுநீரகங்கள் இரத்தத்தை வடிகட்டி கழிவுப் பொருட்களையும் வடிகட்டி சிறுநீருடன் வெளியேற்றி விடுகிறது.
கிரியாட்டினின், யூரியா எனும் இரு உப்புகளும் கழிவுப் பொருட்களிலேயே மிக முக்கியமானவை. இவைகள் உடலில் இருக்கும் அளவை எளிதாக அளந்துவிடலாம். இரத்தத்தில் இருக்கும் அளவே, சிறுநீரகங்களின் வேலைத் திறனைக் காட்டுகிறது. இரு சிறுநீரகங்களும் பழுதாகிவிடும்போது, இரத்தத்தில் இருக்கும் மேற்கண்ட இரு உப்புக்களின் அளவு மிக அதிகமாகி விடுகிறது.
2. உப்பு மிகுந்த தேவையற்ற திரவங்களை வெளியேற்றுவது
சிறுநீரகங்களின் இரண்டாவது முக்கிய செயல்பாடு உடலில் தேவையற்ற உப்பாகத் தங்கிவிடும் நீரை சிறுநீராக மாற்றி வெளியேற்றுவது ஆகும். தேவையான அளவே உடலில் நீரை வைத்துக் கொள்ள உதவுகிறது. இப்படித்தான் நீரின் சமநிலையை சிறுநீரகங்கள் பாதுகாத்து வருகின்றன.
சிறுநீரகங்கள் பழுதடைந்து விடும்போது, அவையால் உப்பு மிகுந்த / உவர்ப்பான நீரை வெளியேற்ற முடிவதில்லை. அப்படி உடலிலேயே தங்கி விடும் நீரானது உடலை வீங்கச் செய்து விடுகிறது.
3. உடலிலேயே தங்கி விடும்
சமநிலைக்கு மேல் இருக்கும் தாது பொருட்களும் இரசாயனப் பொருட்களும். சிறுநீரகங்கள் செய்யும் இன்னொரு முக்கியமான செயல்பாடு என்னவென்றால், உடலில் தங்கி விடும் தாதுப்பொருட்கள் அதாவது பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ் போன்ற தாதுப் பொருட்களை அகற்றுவதாகும். அப்படி அகற்றி உடலில் உள்ள திரவங்களின் அளவை சராசரிக்குக் கொண்டே வருகிறது.
உடலில் இருக்கும் சோடியத்தின் அளவு மாறினால், நினைவிழப்பு பாதிக்கும். பொட்டாசியத்தின் அளவு மாறினால் இதயம் துடிக்கும் வேகத்தில் மாறுதலைக் கொண்டு வரும் மற்றும் தசைகளின் இயக்கங்களிலும் வேறுபாடுகளைக் கொண்டு வரும். கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவற்றின் சரியான அளவுகள் வைக்கப்படுதல் உடலின் ஆரோக்கியத்திற்கும், எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கிய நிலைக்கு அவசியம்.
4. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல்
சிறுநீரகங்கள் வித விதமான ஹார்மோன்களை உருவாக்குகின்றன. (renin, angiotensin, aldosterone, prostaglandin) போன்றவை ஆகும் ஆகியவை உடலில் இருக்கும் நீரின் அளவையும் உப்பின் அளவையும் கட்டுப்படுத்துகின்றன. இந்த செயல்பாடுகள் உங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் முக்கியமான பங்கு வகிக்கிறது. இவற்றில் ஏதாவது சமநிலை பிறழ்ந்தால், உடலின் இரத்த அழுத்தம் கூடுகிறது.
5. இரத்தத்தில் சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்தல்.
எரித்ரோபோயட்டின் எனும் வளர்க்கி இயக்குநீர் சிறுநீரகங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. அது இரத்தத்தில் இருக்கும் சிவப்பு அணுக்கள் உற்பத்தியைத் தூண்டுகின்றன. சிறுநீரகங்கள் பழுதடையும்போது மேற்கண்ட பொருளின் உற்பத்தியும் பாதிப்படைகிறது. ஏற்படுகிறது; இதனால் இரத்தச் சிவப்பு அணுக்கள் குறைகின்றன. அதுவே இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினின் அளவை பாதித்துக் குறைக்கிறது. அப்படிப்பட்ட குறைவான உற்பத்தியால், ஹீமோகுளோபினின் அளவு குறைவதே இல்லை. எவ்வளவுதான் இரும்புச் சத்தும் விட்டமின்களும் உள்ள மருந்துகளைச் சாப்பிட்டாலும் ஹீமோகுளோபினின் அளவு குறைவதில்லை.
6. ஆரோக்கியம் மிகுந்த எலும்புகளை உருவாக்குதல்.
சிறுநீரகங்கள் விட்டமின் டி-யினை அதன் செயல்மிக்க வடிவில் மாற்றித் தருகிறது. அதுவே உணவில் இருக்கும் கால்சியத்தை உட்கிரகிக்க உதவுகிறது. எலும்பின் வளர்ச்சியைக் கண்காணிக்கிறது. பற்களின் வளர்ச்சியைக் கண்காணித்து பற்களை ஆரோக்கியமாக இருக்க வைக்கிறது. விட்டமின் டி குறைந்து சிறுநீரகங்கள் பழுதடைந்தால், எலும்புகளின் வளர்ச்சியும் குன்றுகிறது. அல்லது நலிவடைந்து விடுகின்றன. சிறுவர்களுக்கு ஏற்படும் வளர்ச்சி பின் தங்கி விடுதலே சிறுநீரகங்களின் பழுதின் அறிகுறியாகும்.
7.இரத்தம் எப்படி சுத்திகரிக்கப் பட்டு சிறுநீர் உருவாகிறது?
இரத்தத்தை சுத்திகரிக்கும்போது சிறுநீரகங்கள் தேவையான பொருட்களை எல்லாம் தம்மிடத்தே தங்கவைத்து விடுகின்றன தேவைக்குத் தகுந்தாற்போல் உப்புத்தன்மை கொண்ட திரவங்களையும், தாது பொருட்களையும் மற்றும் கழிவுப் பொருட்களையும் நீக்கி விடுகின்றன.
சிக்கல் மிகுந்த இந்த செயல்பாட்டைப் பற்றி அல்லது பேரதிசயம் மிக்க இந்த செயல்பாட்டைப் பற்றி இப்போது பார்ப்போம்.
- உங்களுக்குத் தெரியுமா? ஒவ்வொரு நிமிடமும் 1200 மி.லி. அளவு இரத்தம் இரு சிறுநீரகங்களுக்கும் வருகிறது. அல்லது சுத்திகரிப்புக்காக அங்குச் செல்கிறது. இது இதயத்திலிருந்து வெளியாகும் இரத்தத்தின் அளவில் 20 சதவீதமாகும். ஆகவே ஒவ்வொரு நாளும் 1700 லிட்டர் அளவு இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது!
- இந்த சுத்திகரிப்பு சிறு சிறு அளவில் நடந்து கொண்டிருக்கிறது. மிகச் சிறிய அளவான வடிகட்டிகள் இதைச் செய்கின்றன. அந்த வடிகட்டிகளுக்குப் பெயர் "நெஃப்ரான்கள்" ஆகும்.
- ஒவ்வொரு சிறுநீரகமும் சுமார் 1 மில்லியன் நெஃப்ரான்களை கொண்டுள்ளன. ஒவ்வொரு நெஃப்ரானும் குளோமெருலஸாலும் டியூபுல்ஸ்களாலும் ஆக்கப்பட்டிருக்கிறது.
- இந்த மேற்கண்ட க்ளோமெரூலஸ் என்பவை சிறு சிறு வடிகட்டிகள். அவற்றில் மிக மிகச் சிறிய துளைகள் உள்ளன. அல்லது முறையாகப் பிரித்துப் பிரித்து வடிகட்டும். நீரும் சிறு பொருட்களும் எளிதாக அவற்றின் மூலம் பிரிக்கப் பட்டு விடுகின்றன. ஆனால் மிகப் பெரிய அளவில் உள்ள இரத்தத்தின் சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், ப்ளேட்லெட்டுகள், புரதம் போன்றவை அவற்றின் வழியே செல்ல முடியாது. ஆகவே ஆரோக்கியமுடைய வயதானவர்களுக்கு பெரிய வடிவில் உள்ள பொருட்களை சிறுநீரில் காண முடியாது.
8. சிறுநீரை சுத்திகரிக்கும் செயலில் முதல் படியானது இந்த க்ளோமெரூலஸ்ஸில் நடக்கிறது.
அங்குதான் சுமார் 125 மி.லி. அளவு ஒவ்வொரு நிமிடமும் சிறுநீர் வடிகட்டப் படுகிறது. 24 மணி நேரத்திற்குள் 180 லிட்டர் சிறுநீர் உற்பத்தி செய்து விடப் படுகிறது! இது ஒரு பேராச்சரியமான செயல்பாடு. அவற்றில் இருப்பவை கழிவுப் பொருட்கள் தாது பொருட்கள் மற்றும் விஷப் பொருட்கள் மட்டுமல்லாமல், க்ளூகோஸ் போன்ற உபயோகமான பொருட்களும் உள்ளன.
- சிறுநீரகங்கள் மீண்டும் உடலிலேயே சேர்த்துக் கொள்ளும் வேலையையும் செய்கின்றன அதைப் பெரும் அளவு நிரம்பிய அக்கறையுடன் செய்கின்றன. டியூபுல்களை வந்தடையும் 180 லிட்டர் திரவத்தில் 99 சதவீதம் பிரித்துப் பிரித்து வடிகட்டப் படுகின்றன மீதமுள்ள 1 சதவீத திரவமே சிறுநீருடன் வெளியேற்றப் படுகிறது.
- இந்த திறன் மிக்க செயல்பாட்டினால், எல்லாவிதமான அவசியமான பொருட்களும் 178 லிட்டர் திரவமும் டியூபுல்களினால் உறிஞ்சப்படுகின்றன. இவை எல்லாம் 1-லிருந்து 2 லிட்டர் நீரிலிருந்து எடுக்கப் படுகின்றன. அவற்றுடன் கழிவுப் பொருட்களும், உப்புத்தன்மை கொண்ட தாது பொருட்களும் மற்றும் இதர தீய பொருட்களும் கலந்திருக்கின்றன.
- சிறுநீரகங்களால் உருவாக்கப்பட்ட சிறுநீரானது, யுரேட்டர்களின் ஊடாக பாய்கிறது. சிறுநீர்ப் பை வழியாக இறுதியில் யூரீத்ரா மூலம் உடலிலிருந்து வெளியேற்றப் படுகிறது.
ஆரோக்கியமான சிறுநீரகங்களை உடைய ஒரு மனிதனின் சிறுநீரின் கன அளவில் மாறுதல் காணப்படுமா?
ஆமாம். நீரின் உட்கொள்ளப்படும் அளவு மற்றும் காற்றின் வெப்ப நிலை போன்ற அம்சங்கள் அந்த கன அளவைத் தீர்மானிக்கின்றன.
- உட்கொள்ளப்படும் நீரின் அளவு குறைவாக இருந்தால், சிறுநீர் அடர்த்தி மிக்கதாக இருக்கும். அதன் கன அளவு குறைவாக இருக்கும். (சுமார் 500 மி.லி.) ஆனால் ஒருவர் நிரம்ப நீர் குடித்தால், அல்லது உட்கொள்ளப்பட்டால், உருவாகும் சிறுநீரின் அளவு அதிகமாகும்.
- கோடை காலத்தில் வியர்வை மிகுதியின் காரணமாக சிறு நீரின் கன அளவு குறையும். குளிர்காலத்தில் அதற்கு மாறுபட்ட நிலையில் இருக்கும். குறைந்த காற்று வெப்ப நிலை, வியர்வை இல்லாமை போன்ற காரணத்தால் சிறுநீர் அதிகமாகச் சுரக்கும்.
- சாதாரண அளவே நீரைப் பருகும் ஒரு நபருக்கு உருவாகும் சிறுநீரின் அளவு 500 மி.லி.க்கு குறைவாக இருந்தால் அல்லது 3000 மி.லி.க்கு அதிகமாக இருந்தால் உடனே சிறுநீரகங்களை பரிசோதிக்கப்பட வேண்டும் என்பதற்கு அது அறிகுறியாகும். சிகிச்சை செய்ய வேண்டும்.